உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130$ அமெரிக்க டொலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக ரஷ்ய நாட்டில் எண்ணை ஏற்றுமதியை தடைசெய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை உயர வாய்ப்பு 130$ டொலர் வரை உயர உள்ளதாக கருதப்படுகின்றது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமை காரணமாக இந்தியா மற்றும் இலங்கையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.